
The Lion and The Mouse Story in Tamil
சிங்கமும் எலியும் – சிறுகதை
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. சிங்கம் இருந்த இடத்திற்கு அருகில் ஒரு சிறு எலியும் ஒரு ஓட்டையில் வாழ்ந்துவந்தது.

ஒரு நாள் சிங்கம் வேட்டையாடிவிட்டு வந்து சோர்வாக தூங்கிக்கொண்டிருந்தது. எலி தனது பொந்தில் இருந்து வெளியில் வந்து சிங்கத்தின் மீது ஏறி இறங்கி குறும்புத்தனம் செய்தது, அதனால் தூங்கிக்கொண்டிருந்த சிங்கம் முழித்துக்கொண்டது.

கோவமான சிங்கம் அந்த எலியை பிடித்து, நான் உன்னை கொன்ற விடுவேன் என்று மிரட்டியது.

பயப்பட்ட எலி சிங்கத்திடம், தன்னை மணித்துவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டது, தன்னை மன்னித்து விட்டுவிட்டால், தன்னால் முடிந்த உதவியை செய்வதாக சிங்கத்திடம் கூறியது. சிங்கமும் எலியை மன்னித்து விட்டுவிட்டது. சில நாட்கள் அப்படியே சென்றது.

ஒரு நாள் சிங்கம் வேட்டைக்கு சென்றபோது, ஒரு வலையில் மாட்டிக்கொண்டது.

சிங்கம் கோவத்தோடு சத்தம்போட்டது, சிங்கத்தின் சத்தத்தை கேட்ட எலி, சிங்கம் எங்கோ மாட்டிக்கொண்டதை உணர்ந்தது.

சிங்கத்திற்கு உதவ வேண்டும் என்று எலி அந்த இடத்திற்கு சென்றது.

எலி தன் பல்லால் வலையை கடித்து அறுத்தது, சிறது நேரத்தில் வலையை அறுத்து சிங்கத்தை விடுவித்தது எலி. சிங்கமும் எலியும் நண்பர்களாக ஒன்று சேர்ந்தது காட்டில் வாழ்ந்து வந்தன.

கதையின் நீதி:
-
யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
-
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
-
சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெரிய உதவியாக இருக்கும்.
Moral of the Story:
-
Never underestimate anyone.
-
Even tiny things can be of immense help.
-
The smallest acts of kindness, make the biggest difference in someone’s life.
Click here to read this moral short story in English.
You can also download The Lion and the Mouse story PDF.
I hope you all enjoyed the story – The Lion and The Mouse – Tamil Short Stories for Kids.
Read More Short Stories for Kids from this website.
Visit & Support our other site www.mondayquotes4u.com where you can find Inspirational & Motivational Quote in beautiful pictures